பாஜக நியமன எம்.பி மகேஷ் ஜெத்மலானி
புதுடெல்லி: மேற்குவங்க தேர்தலில் தோல்வியடைந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, “தேர்தலில் நாங்கள் தோல்வியடையவில்லை, எங்கள் வெற்றி திருடப்பட்டுள்ளது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்” என கூறிவருகிறார்.
இது குறித்து பாஜக நியமன எம்.பி.யும், பிரபல வழக்கறிஞருமான மகேஷ் ஜெத்மலானி கூறும்போது, "மம்தாவின் நடத்தை மன்னிக்க முடியாதது. இது ஒட்டுமொத்த ஜனநாயக நடைமுறைக்கு சவாலான செயல். தேர்தல் முடிவு வெளியாகிவிட்டால், முதல்வர் பதவி முடிந்து விடுகிறது. பதவியை ராஜினாமா செய்ய முடியாது என கூறுவது அவமதிப்பு. அவருக்கு பாடம் புகட்ட வேண்டும்.
வீண் பிடிவாதம் செய்வது அவரது நடத்தை மம்தா தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், அவரை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அத்துமீறும் மம்தாவை காவல்துறையினரை அனுப்பி வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டும்" என்றார்.
பதவி நீக்குங்கள்: மம்தா பானர்ஜி நேற்று கூறும்போது, "அவர்கள் என்னைப் பதவி நீக்கம் செய்யட்டும். அந்த நாளை ஒரு கருப்புத் தினமாக நான் கருதுவேன். தேர்தலுக்கு பிறகு நடந்த வன்முறை தொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்" என்றார்.