இந்தியா

ரூ70,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு: ஏஐ உதவியால் மோசடி பிரியாணி ஓட்டல்கள் சிக்கின

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​தின் உதவி​யால் பிரி​யாணி ஓட்​டல்​களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்டுள்​ளது.

வரு​மான வரித் துறை அதி​காரி​கள் கடந்த ஆண்டு நவம்​பரில் ஹைத​ரா​பாத்​தில் உள்ள 40 பிரி​யாணி ஓட்டல்களில் சோதனை நடத்​தியபோது, வரு​வாயை மறைத்து ரூ.400 கோடி வரிஏய்ப்பு மோசடி நடந்தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதைத் ​தொடர்ந்து தெலங்​கா​னா, ஆந்​தி​ரா, தமிழகம், குஜ​ராத், ராஜஸ்​தான் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் செயல்​படும் பிரபல பிரி​யாணி ஓட்​டல்​களின் கட்டண ரசீது விவரங்​களை வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை செய்​தனர். இதற்கு செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​பட்​டது.

          

சுமார் 1.77 லட்​சம் பிரி​யாணி ஓட்டல்களில் கடந்த 2019 முதல் 2025 வரை எவ்​வளவு பிரி​யாணி விற்​பனை செய்​யப்​பட்​டது என்​பது குறித்து ஆய்வு செய்​யப்​பட்​டது. 60,000 ஜிபி அளவு கொண்ட கோப்​பு​கள் ஏஐ தொழில்​நுட்​பத்​தின் மூலம் விரை​வாக ஆய்வு செய்​யப்​பட்​டன.

அப்​போது பிரி​யாணி தயாரிக்க தேவைப்​படும் அரிசி, இறைச்​சி​யின் அளவுக்​கும், கணக்​கில்காட்​டப்​பட்ட விற்​பனைக்​கும் மிகப்​பெரிய வித்​தி​யாசம் இருந்​தது. மேலும் ஸ்விக்​கி, சோமாட்டோ போன்ற ஆன்​லைன் நிறு​வனங்​கள் மூலம் விற்​பனை​யான பிரி​யாணி வகை​களின் எண்​ணிக்​கைக்​கும், ஓட்​டல்​கள் தாக்​கல் செய்த புள்​ளி​விவரங்​களுக்​கும் இடையே மிகப்​பெரிய இடைவெளி இருந்​தது.

இதன்​படி கடந்த 6 ஆண்​டு​களில் சுமார் ரூ.70,000 கோடி அளவி​லான பிரி​யாணி விற்​பனையை ஓட்​டல் நிர்​வாகங்​கள் மறைத்​துள்ளன. இதுகுறித்து வரு​மான வரித் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பிரி​யாணி ஓட்​டல்​களில் ரொக்க பணப் பரி​மாற்​றம் கணினி​யில் பதிவேற்​றம் செய்​யப்​பட​வில்​லை. ரொக்க பண வணி​கத்தை ஆய்வு செய்​வது மிக​வும் கடினம்.

இதன்​மூலம் பெரிய அளவில் ஏரிஏய்ப்பு நடந்துள்​ளது. மேலும், சாப்ட்​வேர் மூலம் கணினியில் பதிவேற்​றம் செய்​யப்​பட்ட கட்டண ரசீதுகளில் சுமார் 30 நாட்​கள் வரையி​லான ரசீதுகளின் விவரங்​கள் முழு​மை​யாக அழிக்​கப்​பட்டுள்​ளன.

கடந்த 2019- 2025 காலகட்டத்​தில் 1.77 லட்​சம் ஓட்​டல்​களில் 2.43 லட்​சம்கோடிக்கு பிரி​யாணி விற்பனை நடந்ததாக கணக்கு காட்​டப்​பட்டுள்​ளது. ஆனால் ரொக்க விற்பனை, கணினி​யில் பதிவேற்​றம் செய்​யப்பட்ட ரசீதுகளை அழித்​ததன் மூலம் ரூ.70,000 கோடி அளவி​லான பிரி​யாணி விற்​பனை மறைக்​கப்​பட்டுள்​ளது.

முதல்​கட்ட ஆய்​வின்​படி கர்​நாடகஓட்​டல்​களில் ரூ.2,000 கோடி, தெலங்​கானா ஓட்​டல்​களில் ரூ.1,500 கோடி, தமிழக ஓட்​டல்​களில் ரூ.1,200 கோடி வரிஏய்ப்பு கண்​டறியப்​பட்டுள்​ளது. ஏஐ தொழில்​நுட்​பத்​தின் உதவி​யால் மிக குறுகிய காலத்​தில் 60,000 ஜிபி அளவு கோப்​பு​களை ஆய்வு செய்து வரிஏய்ப்பு மோசடியை கண்​டு​பிடித்து உள்​ளோம்.

சம்​பந்​தப்​பட்ட ஓட்​டல் நிர்​வாகங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். இதேபோல நாடு முழு​வதும் உள்ள பிரி​யாணி ஓட்​டல்​கள், இதர ஓட்​டல்​களில் கோடிக்​கணக்​கில் வரிஏய்ப்பு நடந்திருக்​கக்​கூடும் என்று சந்​தேகிக்​கிறோம். இதுதொடர்​பாக ஏஐ உதவி​யுடன் விரை​வில் சோதனை தொடங்கப்படும்.

SCROLL FOR NEXT