இந்தியா

பிஹாரில் பள்ளி ஆசியர்களுக்கு தெருநாய் கணக்கிடும் பணி

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரின் சசா​ரம் மாநக​ராட்சி தனது எல்​லைக்​குள் செயல்​படும் அனைத்து பள்​ளி​களுக்​கும் ஒரு சுற்​றறிக்கை அனுப்பி​யுள்​ளது.

அதில், தெரு நாய்​கள் பற்​றிய தகவல்​களை சேகரிக்​க​வும் பகிர்ந்து கொள்​ள​வும் பொறுப்பு அலு​வலர் ஒரு​வரை (ஆசிரியரை) நியமிக்​கு​மாறு உத்​தர​விட்​டுள்​ளது. இதன்​படி பள்ளி வளாகத்தைச் சுற்​றி​லும் காணப்​படும் தெரு நாய்​களின் எண்​ணிக்​கை, அவற்​றின் தற்​போதைய நிலை குறித்து மாநக​ராட்​சிக்கு ஆசி​ரியர்​கள் தெரிவிக்க வேண்​டும்.

இதுகுறித்து சசா​ரம் மாநக​ராட்சி ஆணை​யர் விகாஸ் குமார் கூறுகை​யில், “அரசு வழி​காட்​டு​தலின் அடிப்​படை​யில் ​தான் இந்த உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. திட்​ட​மிடலுக்கு உதவுவதற்​காக தெரு நாய்​கள் குறித்த துல்​லிய​மான, உள்​ளூர் அளவி​லான தகவல்​களை சேகரித்து வழங்​கிட பொறுப்பு அலு​வலரை நியமிக்​கு​மாறு கல்வி நிறு​வனங்​கள் கேட்​டுக்​கொள்​ளப்​பட்​டுள்​ளன” என்​றார். ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பணிகள் தரப்படுவதால் மாணவர்​களின் கல்வி பாதிக்​கப்​படு​வ​தாக புகார் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT