மணிகண்டன் ஐஏஎஸ்

 
இந்தியா

உ.பி.யில் பிடிஏ துணைத் தலைவர் மணிகண்டன் ஐஏஎஸ் மாற்றம்

சட்டவிரோதக் கட்டுமானங்கள், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டவர்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தமிழ்​நாட்​டின் நெய்​வேலியைச் சேர்ந்த தமிழ​ரான டாக்​டர்​.ஏ.மணி​கண்​டன், 2017ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற உ.பி. மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதி​காரி. நாட்​டிலேயே மருந்​தி​யல் துறையில் முனை​வர் பட்​டம் பெற்ற முதல் ஐஏஎஸ் அதி​காரி​யான இவர், உ.பி.​யின் பரேலி வளர்ச்சி ஆணை​யத்​தின் (பிடிஏ) துணைத் தலை​வ​ராகப் பணி​யாற்றி வந்​தார்.

பரேலி​யில் மணி​கண்​டன் பதவி ஏற்​றது முதல், பல வளர்ச்​சித் திட்டங்​களும் அந்​நகரில் அமலாகின. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​தின் ‘நாத் காரி​டார்' என்ற கனவு திட்​டத்​தின் ஆரம்​பக்​கட்​டப் பணி​கள் பாராட்​டைப் பெற்​றன. இதே​போல், பொது​மக்களுக்கான ராம்​கங்கா நகர் வீட்டு வசதித் திட்​டம், கிரேட்​டர் பரேலி வீட்டு வசதித் திட்​டம், முதல்​வர் மாதிரி ஒருங்​கிணைந்த பள்ளி மற்​றும் விளை​யாட்டு வளாகம் போன்​றவற்றை அமல்படுத்தி​னார்.

குறிப்​பாக, பரேலி​யில் ருத்​ர​வனம் எனும் பூங்​காவை சர்​வ​தேச அளவில் முன்​னிருந்து அமைத்​திருந்​தார். இதனுள், ராமாயண் வாட்​டிகா எனும் புதிய அம்​சத்​தை​யும் உரு​வாக்​கி, முதல்​வர் யோகி​யின் பாராட்​டைப் பெற்​றார். இந்​நிலை​யில், கடந்த செப்டம்பர் மாதம், நகரில் கலவரத்​தில் ஈடு​பட்​ட​தாகக் குற்றம்சாட்​டப் ​பட்​ட​வர்​களின் சட்​ட​விரோதக் கட்​டு​மானங்​களை இடித்​துத் தள்​ளியதன் மூலம் அவர் மாநிலம் முழு​வதும் கவனத்தை ஈர்த்​தார்.

சட்​ட​விரோதக் கட்​டு​மானங்​களுக்கு எதி​ரான கடுமை​யான நடவடிக்​கைகள் மற்​றும் வளர்ச்​சித் திட்​டங்​களில் அலட்​சி​யம் காட்டு​வோருக்கு எதி​ரான செயல்​பாடு​கள் அதி​காரி மணி​கண்டனிடம் அதி​கம் இருந்​தன. இதனால் பல நிர்​வாக அதிகாரிகள் மற்​றும் மக்​கள் பிர​தி​நி​தி​களின் விமர்சனங்களுக்கும் இலக்​கா​னார். இதையடுத்​து, பரேலி நகரை விரிவு படுத்​தும் நோக்​கில், பிலிபித் பைபாஸ் சாலை​யில் உள்ள மகாதேவ்​புரம் வீட்​டு​வச​தித் திட்​டம் மற்​றும் டெல்லி சாலை​யில் உள்ள தொழிற்​பேட்டை ஆகிய​வற்​றுக்​கான நிலம் கையகப்​படுத்​தும் பணி​களை அவர் துரிதப்படுத்தினார்.

பரேலிக்கு முதல்​வர் யோகி​யின் வரு​கையை முன்​னிட்​டு, ‘ராமாயண வாடி​கா'​வைத் திறந்து வைப்​ப​தற்​கும், மகாதேவ்​புரம் வீட்டு ​வச​தித் திட்​டத்​துக்கு அடிக்​கல் நாட்​டு​வதற்​கும் அவர் தீவிர முயற்​சிகளை மேற்​கொண்​டிருந்​தார். இருப்​பினும், உ.பி. அரசு அவரை திடீரென பிடிஏ​வின் துணைத் தலை​வர் பதவியி​லிருந்து நேற்று விடு​வித்​துள்​ளது. அந்​தப் பதவி​யில் அவரது பேட்ச்​மேட்டான ஐஏஎஸ் சவுமியா பாண்டே நியமிக்​கப்​பட்​டுள்​ளார். பரேலி​யில் பல வளர்ச்​சித் திட்​டங்​களை செய்​தவர் மணி​கண்​டன்​ என்​ப​தால்​ அவரது மாற்​றம்​ சர்ச்​சைக்​கு உள்​ளாகி விட்​டது.

SCROLL FOR NEXT