இந்தியா

சகோதரியின் எலும்புக் கூடுடன் வந்த பழங்குடியின நபருக்கு பணத்தை வழங்கியது வங்கி நிர்வாகம்

செய்திப்பிரிவு

புவனேசுவரம்: ஒடிசா மாநிலம் கேந்​துஜார் மாவட்​டம் தியா​னாலி கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஜீத்து முண்​டா. இவரது சகோ​தரி கக்ரா முண்டா இரண்டு மாதங்​களுக்கு முன்பு கால​மா​னார். மல்​லி​பாசி பகு​தி​யில் உள்ள ஒடிசா கிராமின் வங்​கிக் கிளை​யில் கக்ரா கணக்கு வைத்​திருந்​தார். அதில் இருந்த ரூ.19,400-ஐ எடுப்​ப​தற்​காக ஜீத்து முண்டா வங்​கிக்​குச் சென்​றுள்​ளார்.

கல்​வியறிவு இல்​லாத பழங்​குடி​யின​ரான ஜீத்து முண்​டா​விடம், அவரது சகோ​தரி​யின் இறப்​புச் சான்​றிதழ் அல்​லது வாரிசுச் சான்றிதழ் இல்​லை. இதனால், கணக்கு வைத்​திருப்​பவர் நேரில் வர வேண்​டும் அல்​லது உரிய ஆவணங்​களைச் சமர்ப்​பிக்க வேண்டும் என்று வங்கி மேலா​ளர் கூறி​யுள்​ளார்.

சட்ட நடை​முறை​களைப் புரிந்து கொள்ள முடி​யாத நிலை​யில் விரக்​தி​யடைந்த ஜீத்து முண்​டா, கடந்த திங்​கள்​கிழமை மயானத்திற்​குச் சென்று தனது சகோ​தரி​யின் உடலைத் தோண்டி எடுத்​து, எலும்​புக்​கூடை துணி​யால் சுற்றி தோளில் சுமந்​த​படி 3 கிலோ மீட்​டர் தூரம் நடந்து வங்​கிக்கு வந்​தார்.

இந்​தக் காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி நாடு முழுவதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இது வங்​கி​யின் மனிதாபி​மானமற்ற செயல் எனப் பலரும் கண்​டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி​யும் விசா​ரணைக்கு உத்​தர​விட்​டார்.

இந்நிலை​யில் ஒடிசா கிராமின் வங்கி தனது எக்ஸ் தளத்​தில், ‘‘இறந்​தவர் நேரில் வர வேண்​டும் என்று வங்கி அதி​காரி​கள் தெரிவித்​தாகக் கூறப்​படும் தகவல் தவறானது. சட்​டப்​படி​யான ஆவணங்​கள் இல்​லாத​தால் பணத்தை வழங்க முடிய​வில்​லை. அந்த நபர் மது​போதை​யில் இருந்​த​தால் நடை​முறை​களை விளக்கிக் கூறி​யும் அவர் ஏற்​க​வில்​லை. தற்​போது அரசு அதிகாரிகள் வழங்​கிய வாரிசுச் சான்​றிதழின் அடிப்​படை​யில், ரூ.19,402 தொகை 3 வாரிசு​தா​ரர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது’’ என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து உள்​ளூர் மக்​கள் கூறுகை​யில், ‘‘வங்கி அதி​காரி​கள் கிராம பஞ்​சா​யத்​துத் தலை​வரிடம் விசா​ரித்​தாலே உண்மை தெரிந்​திருக்​கும். ஆவணங்​களுக்​காக ஒரு ஏழை மனிதரை இவ்வளவு தூரம் அலைக்​கழித்​தது வேதனைக்​குரியது’’ என்றனர்.

முன்​ன​தாக, இந்த விவ​காரத்​தில், காவல்​ துறை​யினரும் உள்​ளூர் அதி​காரி​களும் தலை​யிட்டு முண்​டாவை சமா​தானப்​படுத்​தினர், மேலும் அவரது கோரிக்கை நிறைவேற்​றப்​படும் என்​றும் அவருக்கு உறு​தி​யளித்​தனர். அதி​காரி​கள் அவருக்கு உதவி​யாக 30,000 ரூபாயை​யும் வழங்க முன்​வந்​தனர். மேலும், அரசு அதிகாரிகள் இறப்​புச் சான்​றிதழை​யும் சட்​டப்​பூர்​வ வாரிசு ஆவணங்​களை​யும்​ ஜீத்​து முண்​டா​விடம்​ வழங்​கினர்​.

SCROLL FOR NEXT