கொச்சி: கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் உள்ள எரூர் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் தாங்கள் வங்கதேசத்தினர் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் மீது குடியுரிமை மற்றும் வெளி நாட்டினர் சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.