புதுடெல்லி: பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கர்நாடாகவின் கடலோர மாவட்டங்களில் கம்பாலா எருமைப் பந்தயம் நடத்தும் வகையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
ஆனால், பெங்களூரு, ஷிவ்மோகா ஆகிய மாநகரங்களில் கம்பாலா எருமைப் பந்தயம் நடத்தப்படுவது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்துக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது என்பதால், எருமைப் பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.