இந்தியா

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம்: அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜினாமா ஏற்பு

செய்திப்பிரிவு

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நன்​கொடை திருட்டு விவ​காரம் தொடர்​பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை​யின் பொதுச்​செய​லா​ளர் சம்​பத் ராய், அறங்​காவலர் அனில் மிஸ்ரா அண்​மை​யில் ராஜி​னாமா செய்​தனர். அயோத்​தி​யில் நேற்று நடை​பெற்ற அறக்​கட்​டளை கூட்​டத்​தில் இருவரது ராஜி​னாமா கடிதங்​களும் ஏற்​கப்​பட்​டன.

அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்​தர்​கள் அளிக்​கும் நன்​கொடை, காணிக்கை பணம் திருடப்​படு​வ​தாக புகார்​கள் எழுந்​தன. சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்​யப்​பட்​டிருப்​ப​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இதுதொடர்​பாக விசா​ரிக்க உத்தர பிரதேச அரசு சார்​பில் கடந்த ஜூன் 15-ம் தேதி சிறப்பு புல​னாய்வு குழு (எஸ்​ஐடி) நியமிக்​கப்​பட்​டது.

மூத்த ஐஏஎஸ் அதி​காரி விஜய் விஷ்​வாஸ், மூத்த ஐபிஎஸ் அதி​காரி கிரண், நிதித் துறை சிறப்பு செய​லா​ளர் நீல் ரத்​தன் உள்​ளிட்​டோர் அடங்​கிய எஸ்​ஐடி குழு​வினர் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்​கட்​டளை நிர்​வாகி​கள், மூத்த அதி​காரி​கள், ஊழியர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்​தினர். கடந்த ஜூன் 23-ம் தேதி எஸ்​ஐடி சார்​பில் உத்தர பிரதேச அரசிடம் 20 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சூழலில், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்​ செய​லா​ளர் சம்​பத் ராய், அறங்​காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் கடந்த 26-ம் தேதி தங்​கள் பதவிகளை ராஜி​னாமா செய்​தனர். காணிக்கை பெட்டி பொறுப்பாளர் ராம்​சங்​கர் யாதவ், காணிக்கை பணம் எண்​ணும் பிரிவை சேர்ந்த அனுகல்ப் மிஸ்ரா, லவகுஷ் மிஸ்​ரா, சுபாஷ் சந்திர வஸ்​த​வா, கருணேஷ் பாண்​டே, மணீஷ் யாதவ், அவி​னாஷ் சுக்​லா, ராம்​சங்​கர் மிஸ்ரா ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் இருந்து ரூ.79.85 லட்​சம் ரொக்​கம் பறி​முதல் செய்யப்பட்​டது.

அயோத்தி ராமர் கோயிலை நிர்​வகிக்​கும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்​கட்​டளை​யின் பொதுச்​செய​லா​ளர் சம்​பத் ராய், உறுப்​பினர் அனில் மிஸ்ரா ஆகியோர் பதவி வில​கிய நிலை​யில் அறக்​கட்​டளை கூட்​டம் அயோத்தி ராமர் கோயில் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க சம்​பத் ராய் சென்​றார். ஆனால் அவர் அனு​ம​திக்​கப்​பட​வில்​லை.

இந்த கூட்​டத்​தில் பொதுச்​செய​லா​ளர் சம்​பத் ராய், உறுப்​பினர் அனில் மிஸ்​ரா​வின் ராஜி​னாமா கடிதங்​கள் ஏற்​கப்​பட்​டன. ஓய்வு பெற்ற ஐஎஃப்​எஸ் மூத்த அதி​காரி​யும் அறக்​கட்​டளை உறுப்​பினரு​மான கிருஷ்ண மோகன் தற்​காலிக பொதுச்​ செய​லா​ள​ராக நியமிக்​கப்​பட்​டார். சுமார் 3 மணி நேரம் கூட்​டம் நடை​பெற்​றது. பின்னர், செய்தியாளர்களிடம் நிர்வாகிகள் கூறியதாவது:

தமிழகத்தை சேர்ந்த அறக்​கட்​டளை உறுப்​பினர் கே.பராசரன்: சம்பத் ராய், அனில் மிஸ்ராவின் ராஜி​னாமா கடிதங்​கள் கூட்டத்தில் ஏற்​கப்​பட்​டன. அறக்​கட்​டளை​யின் அடுத்த கூட்​டம் 22-ம் தேதி நடை​பெறும்.

அறக்​கட்​டளை​யின் புதிய பொதுச் ​செய​லா​ளர் கிருஷ்ண மோகன்: கோயில் நிர்​வாக சீர்​கேடு​கள் களை​யப்​படும். தற்​போதைய பிரச்​சினை​யால் கோயில் நிர்​வாகம் மீது அவநம்​பிக்கை எழுந்​திருக்​கிறது. இந்த நிலையை மாற்றி மீண்​டும் மக்​களின் நம்​பிக்​கையை பெறு​வோம். சிறப்பு அழைப்​பாளர் பதவி​யில் இருந்து கோபால் நகரகட்டே நீக்​கப்​பட்டுள்​ளார். நன்​கொடை திருட்டு தொடர்​பாக சிறப்பு புல​னாய்வு குழு தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த விசா​ரணை​யின் முடி​வில் உண்​மை​கள் வெளிச்​சத்​துக்கு வரும். மோசடி செய்​தவர்​கள் தண்​டிக்கப்படுவார்கள்.

அறக்​கட்​டளை பொருளாளர் கோவிந்த் கிரி: ராமர் கோயிலுக்கு நன்​கொடை​யாக வழங்​கப்​பட்ட 5 தங்க, வெள்ளி பொருட்​கள் திருடப்​பட்​ட​தாக புகார்​கள் எழுந்​தன. அவை திருடப்​பட​வில்​லை. அவற்றை செய்தியாளர்​கள் முன்பு காட்​சிக்கு வைத்​திருக்​கிறோம். சிலர் (அகிலேஷ் யாதவ் உள்​ளிட்​டோர்) அரசி​யல் லாபத்​துக்​காக திடீரென ராம பக்​தர்​களாக மாறி கோயில் நிர்​வாகத்​துக்கு களங்​கத்தை ஏற்​படுத்தி வரு​கின்​றனர். சில சுயநலத்​துக்​காக பொய் புகார்​களை சுமத்தி வரு​கின்​றனர். அனைத்து சதி​களை​யும் முறியடிப்​போம்.

பொதுச்​ செய​லா​ளர் சம்​பத் ராய் எந்த தவறும் செய்​ய​வில்​லை. ஆனால் அவர் சார்ந்த நபர்​கள் தவறுகளை செய்​துள்​ளனர். அவர் கவனத்​துடன் செயல்​பட்​டிருக்க வேண்​டும். 3 பேர் குழு நியமிக்கப்பட்​டுள்​ளது. அந்​த குழு புதி​ய அறங்​காவலர்​களை நியமனம்​ செய்​யும்​.

ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கப் புத்தகம் ‘ராமசரிதமானஸ்’ திருடப்படவில்லை

மத்திய அரசின் முன்னாள் உள்துறை செயலரான லட்சுமி நாராயணா கடந்த 2024 -ம் ஆண்டு ஏப்ரலில் ராமர் கோயிலுக்கு சென்றார். அப்போது, தங்க முலாம் பூசப்பட்ட 522 பக்க ‘ராமசரிதமானஸ்’ புனித நூலை (147 கிலோ) சம்பத் ராயிடம் அளித்ததாகவும், அந்த நூலை தற்போது காணவில்லை என்றும் லட்சுமி நாராயணா குற்றம் சாட்டினார். இந்த சூழலில் அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் கிரி நேற்று செய்தியாளர்களிடம் காண்பித்த 5 பொருட்களில் புனித நூலும் இருந்தது. ரூ.5 கோடி மதிப்புள்ள ‘ராமசரிதமானஸ்’ தங்கப் புத்தகம் பாதுகாப்பாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT