இந்தியா

சுவேந்து அதிகாரி மீது தாக்குதல்: மேற்கு வங்கம் முழுவதும் பாஜகவினர் போராட்டம்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்​கு​வங்​கத்​தில் அடுத்த சில மாதங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது.

இதையொட்டி முதல்வர் மம்தா தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்​கிரஸ், பிர​தான எதிர்க்​கட்​சி​யான பாஜக ஆகியவை இப்போதே தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றன. இந்த சூழலில் மேற்​கு​வங்க சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் சுவேந்து அதி​காரி நேற்று முன்​தினம் புரூலி​யா​வில் பாஜக நிர்வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்​திவிட்டு இரவு மிட்​னாபூருக்கு காரில் சென்​றார்.

அப்​போது அவரது காரை திரிண​மூல் காங்​கிரஸ் தொண்டர்கள் வழிமறித்து தாக்​குதல் நடத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. இதைக் கண்டித்து மேற்​கு​வங்​கம் முழு​வதும் பாஜக தொண்​டர்​கள் நேற்று பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தினர்.

இதுதொடர்​பாக திரிண​மூல் செய்​தித் தொடர்​பாளர் ஆருப் சக்​கர​வர்த்தி கூறும்​போது, “சுவேந்து அதி​காரிகாரில் சென்​ற​போது, “ஜெய் பங்​களா” என்றுதான் எங்​கள் தொண்​டர்​கள் குரல் எழுப்​பினர். அதை கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.

சுவேந்து அதி​காரி கூறும்​போது, “ஐபேக் நிறுவனத்தில் நடந்த சோதனையை திசை திருப்ப சுரங்க ஊழலில் எனக்கு தொடர்பு இருப்பதாக என் மீது பொய் குற்​றச்​சாட்​டு​களை மம்தா சுமத்துகிறார். அவர் ஆதா​ரங்​களை வெளி​யிட​வில்லை என்​றால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரு​வேன்” என்று எச்​சரிக்கை விடுத்​தார்.

SCROLL FOR NEXT