அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
குவஹாட்டி: மத்திய அரசுக்குப் பிறகு தனது ஊழியர்களின் ஊதியக் கட்டமைப்பை திருத்துவதற்காக 8-வது ஊதியக் குழுவை அமைக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை அசாம் பெற்றுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மத்திய அரசு ஏற்கெனவே ஊதியக் குழுவை அமைத்துவிட்டது. ஆனால், அதற்குப் பிறகு எந்த மாநில அரசும் ஊதியக்குழுவை இதுவரை அமைக்கவில்லை. அதை அமைக்கும் நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமை அசாமுக்கு தற்போது கிடைத்துள்ளது. இது ஊழியர்களின் நலன் மற்றும் முற்போக்கான நிர்வாகத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்” என்றார்.