அசாம் சட்டப்பேரவை

 
இந்தியா

ஏழுமலையான் கோயிலுக்கு அசாம் அரசு 25 ஏக்கர் ஒதுக்கீடு

என். மகேஷ்குமார்

திருமலை: அ​சாம் மாநில அரசு குவாஹாட்டி நகரில் ஏழு​மலை​யான் கோயில் கட்ட 25 ஏக்​கர் நிலத்தை ஒதுக்கி உள்​ளது.

அசாமில் உள்ள குவாஹாட்​டி​யில் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் ஏழு​மலை​யான் கோயில் கட்ட தீர்​மானித்​துள்​ளது. இதற்​காக நிலம் ஒதுக்​கு​மாறு அசாம் மாநில அரசுக்கு தேவஸ்​தானம் சார்​பில் கடிதம் எழுதப்​பட்​டது.

இதனைத் தொடர்ந்​து, அசாம் அரசு குவாஹாட்​டி​யில் முதலில் 10.8 ஏக்​கர் நிலத்தை ஒதுக்​கியது. ஆனால், 25 ஏக்​கர் நிலம் இருந்​தால் கோயில் மிக​வும் பிரம்​மாண்​ட​மாக கட்ட முடி​யும் என திருப்​பதி தேவஸ்​தானம் நினைத்​தது. இத்​தகவலை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​விடம் அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு தெரி​வித்​தார்.

இதனை தொடர்ந்​து, முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அசாம் மாநில முதல்​வருக்கு சமீபத்​தில் கடிதம் எழுதி இருந்​தார். இதனைத் தொடர்ந்து கோயிலுக்​காக தற்​போது 25 ஏக்​கர் நிலம் ஒதுக்​கி​யுள்​ள​தாக அசாம் மாநில அரசு உறுதி பட தேவஸ்​தானத்​துக்கு கடிதம் எழுதி உள்​ளது.

விரை​வில் குவாஹாட்​டி​யில் ஏழு​மலை​யான் கோயில் கட்​டு​மானப் பணி​கள் தொடங்​கப்​படும் என பிஆர் நா​யுடு தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT