இந்தியா

ஆனைமங்கலச் செப்பேடுகள் சோழ மன்னர்களின் பொக்கிஷம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆனைமங்கலச் செப்பேடுகள் சோழ மன்​னர்​களின் பொக்​கிஷம் என்று மனதின் குரல் ​(மன் கி பாத்) நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பெரு​மிதம் தெரி​வித்​தார்.

ஒவ்​வொரு மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை அன்று பிரதமர் மோடி வானொலி​யில் ‘மன் கி பாத்’ (மன​தின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடம் உரை​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், நேற்று வானொலி​யில் 134-வது மன் கி பாத் நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: சில நாட்​களுக்கு முன்பு எனக்கு ஐரோப்​பா​வில் உள்ள நெதர்​லாந்​துக்​குச் செல்​லும் வாய்ப்பு கிடைத்​தது. அங்கு நான் பல்​வேறு கூட்​டங்​களில் பங்​கேற்​றேன். அங்கு நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்​சி​யில், சோழர் காலத்​தைச் சேர்ந்த பழமை​யான செப்​புப் பட்​ட​யங்​கள் இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. இந்​நிகழ்​வில் நெதர்​லாந்து பிரதமரும் கலந்து கொண்​டார்.

இந்த ஆனைமங்​கலச் செப்​பேடு​கள் குறித்து நாடு முழு​வ​தி​லும் இருந்​தும், வெளி​ நாடு​களில் இருந்​தும் எனக்​குத் தொடர்ந்து செய்​தி​கள் வந்​தவண்​ணம் உள்​ளன. உலகெங்​கிலும் உள்ள தமிழ் சமூகத்​தினரிடையே இதற்​கென ஒரு தனி உற்​சாக​மும் நிலவுகிறது. இதில் 21 பெரிய மற்​றும் 3 சிறிய செப்​பேடு​கள் உள்ளன. இவை முக்​கிய​மாக முதலாம் ராஜேந்​திர சோழ மன்னருடன் தொடர்​புடைய​வை.

இந்த செப்​பேடு​கள் ஆனைமங்​கலம் கிராமத்தை புத்த மடாலயத்துக்கு (புத்த விஹாரம்) சோழ மன்​னர் தான​மாக வழங்கியதைக் குறிப்​பிடு​கிறது. அவை சோழ வம்​சத்​தின் சாதனை​களை​யும் விவரிக்​கின்​றன. சோழ வம்​சத்​தின் வலிமைமிக்க கடற்​படை ஆற்​றலை அவை காட்​டு​கின்​றன. தென் ​கிழக்கு ஆசிய நாடு​களு​ட​னான அவர்​களின் உறவு​கள் பற்​றிய தகவல்​களை​யும் அவை வழங்​கு​கின்​றன. சோழப் பேரரசின் வளமான வரலாறு மற்​றும் கலாச்​சா​ரத்தை எண்ணி நாம் அனைவரும் பெரு​மிதம் கொள்​கிறோம். இத்​தகைய விலைமதிப்பற்ற பாரம் ​பரி​யத்​தைப் பாது​காப்​ப​தில் மத்​திய அரசு தொடர்ந்து பணியாற்றி வரு​கிறது.

சோழ மன்​னர்​கள், போர்​களில் பெற்ற வெற்​றிகள், சாதனை​களை இவை விவரிக்​கின்​றன. தமிழகத்​துக்​கும், தென் கிழக்கு ஆசிய நாடு​களுக்​கும் இருந்த ஆழமான வணிக, தூதரக உறவு​கள் குறித்​தும் இந்த செப்​பேடு​கள் கூறுகின்​றன. இந்த வரலாற்று ஆவணங்​கள் தமிழகத்​தின் பொற்​கால வரலாற்றை பறை​சாற்​றுகின்​றன.

விளை​யாட்டு வீரர்​கள்: இந்​திய விளை​யாட்டு வீரர்​கள் சிறப்​பான செயல்​பாடு​கள் மூலம் நாட்​டுக்கு பெருமை சேர்த்​துள்​ளனர். அவர்களின் சாதனை​கள் புதிய அளவு​கோல்​களை உருவாக்குவதோடு, அடுத்த தலை​முறை வீரர்​களுக்​கும் உத்வேகம் அளிப்​ப​தாக உள்​ளன. ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்சியில் சமீபத்​தில் நடந்த தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பை தடகள போட்​டி​யில் பல்​வேறு பிரிவு​களில் 4 தேசிய சாதனை​கள் முறியடிக்​கப்​பட்​டுள்​ளன. குரீந்​தர்​வீர் சிங், விஷால் டி.கே., தேஜஸ்​வின் சங்​கர், தேவ் மீனா, குல்​தீப் குமார் ஆகியோர் தத்​தமது பிரிவு​களில் புதிய சாதனை​களை படைத்​துள்​ளனர்.

100 மீட்​டர் ஓட்​டத்​தில் இரண்டு நாட்​களுக்​குள் தேசிய சாதனை மூன்று முறை முறியடிக்​கப்​பட்​டது. குரீந்​தர் வீர் சிங் முதலில் நடை​பெற்ற அரை இறு​தி​யில் 10.17 விநாடிகளில் ஓடி சாதனை படைத்​தார். அதைத் தொடர்ந்து நடை​பெற்ற ஹீட் பிரி​வில் அனிமேஷ் குஜுர் 10.15 விநாடிகளில் ஓடி அந்த சாதனையை முறியடித்​தார். இதைத் தொடர்ந்து இறு​திச் சுற்​றில் குரீந்​தர் வீர் சிங் 10.09 விநாடிகளில் பந்தய தூரத்​தைக் கடந்து புதிய தேசிய சாதனையைப் படைத்​தார். குரீந்​தர்​வீர் சிங், அனிமேஷ் குஜூர் ஆகியோரின் சாதனை​கள் இந்​திய தடகளத் துறை​யில் வளர்ந்து வரும் வலிமை​யை வெளிப்​படுத்​துகின்​றன. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT