இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பெண் துணை முதல்வராக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பதவியேற்பு

செய்திப்பிரிவு

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வின் முதல் பெண் துணை முதல்​வ​ராக, மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் நேற்று பதவி​யேற்றுக் கொண்டார்.

மகா​ராஷ்டி​ரா​வின் துணை முதல்​வ​ராக இருந்த தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்சித் தலை​வர் அஜித் பவார், பாராம​தி​யில் கடந்த 28-ம் தேதி நிகழ்ந்த விமான விபத்​தில் உயி​ரிழந்​தார். அவரது உடல் பாராம​தி​யில் 29-ம் தேதி தகனம் செய்​யப்​பட்​டது. இறு​திச்சடங்​கில் அஜித் பவாரின் சித்​தப்பா சரத் பவார், மத்​திய, மாநில அமைச்​சர்​கள் உட்பட பலர் கலந்து கொண்​டனர். பாராம​தி​யில் நீரா - கர்ஷா நதி​கள் சங்​கமிக்​கும் இடத்​தில் நேற்று முன்​தினம் அஸ்தி கரைக்​கப்​பட்​டது.

          

அஜித் பவார் மறைவை அடுத்து, தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சியை (என்​சிபி) அவரது மனை​வி​யும், மாநிலங்களவை எம்​.பி.​யு​மான சுனேத்ரா பவார் (62) வழிநடத்த வேண்​டும். துணை முதல்​வ​ராக அவர் பொறுப்​பேற்க வேண்​டும் என்று கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள், தொண்​டர்​கள் வலி​யுறுத்​தினர்.

இந்த கோரிக்​கையை சுனேத்ரா பவார் ஏற்​றுக் கொண்​டார். நேற்று மதியம் நடைபெற்ற என்சிபி கட்சிக் கூட்​டத்தில் என்​சிபி சட்​டப்​பேரவை கட்சித் தலை​வ​ராக சுனேத்ரா பவார்​ ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார். இந்த கடிதம் உடனடியாக முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸிடம் வழங்​கப்​பட்​டது. அவர் இதை ஆளுநர் ஆச்​சார்ய தேவவ்ரத்​துக்கு அனுப்​பி​னார்.

இதையடுத்து, மகா​ராஷ்டி​ராவின் துணை முதல்​வ​ராக பதவி​யேற்க சுனேத்ராவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்​தார். தலைநகர் மும்பையில் உள்ள லோக்பவனில் நேற்று மாலை 5 மணிக்​கு நடந்த நிகழ்வில், மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்​வ​ராக சுனேத்ரா பவார் பதவி​யேற்​றார். அவருக்கு ஆளுநர் ஆச்​சார்ய தேவவ்​ரத் பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். முதல்வர் தேவேந்​திர பட்​னா​விஸ், துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே, மாநில அமைச்​சர்​கள் கலந்து கொண்​டனர்.

சுனேத்ராவுக்கு வருவாய், விளையாட்டு, இளைஞர் நலன், சிறுபான்மையினர் மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அஜித் பவாரிடம் ஏற்கெனவே இருந்த நிதித் துறையை முதல்வர் பட்னாவிஸ் கவனிப்பார்.

பிரதமர் மோடி வாழ்த்து: சுனேத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி, எக்ஸ் தளத்​தில் வெளியிட்ட பதிவில், ‘மகா​ராஷ்டி​ரா​வின் முதல் பெண் துணை முதல்​வ​ராக பொறுப்​பேற்ற சுனேத்ரா பவாருக்கு வாழ்த்​துகள். மாநில மக்களின்​ நலனுக்​​காக அய​ராது உழைத்து, அஜித்​ பவாரின்​ தொலைநோக்கை நிறைவேற்​று​வார்​ என நம்​புகிறேன்​’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பாராம​தி​யில் என்சிபி (சரத் பவார் அணி) தலை​வர் சரத் ப​வார் அளித்த பேட்​டி​யில், ‘‘இரண்​டாக உடைந்த என்​சிபி கட்​சிகள் மீண்டும் இணைய வேண்​டும் என்​பது அஜித் பவாரின் ஆசை. இதற்​கான அறி​விப்பை பிப்.12-ல் வெளியிடவும் திட்​ட​மிட்​டிருந்​தார். துணை முதல்​வ​ராக சுனேத்ரா பதவியேற்​பது குறித்து எனக்கு தெரி​யாது. அதுபற்றி என்​னிடம் ஆலோ​சிக்​கவும் இல்லை” என்​றார்.

கட்சிகள் இணையுமா? - அஜித் பவார் அணியை சேர்ந்த என்சிபி கட்சி தலைவர்களுக்கு, சரத் பவார் அணியுடன் இணைய ஆர்வம் இல்லாதது போல தெரிகிறது. அஜித் பவார் வாரிசாக சுனேத்ரா இருப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். இதனால், கட்சியின் பிரிவுகள் இணைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் இதையே தெரிவித்துள்ளார்.

சுனேத்ராவின் அரசியல் பயணம்: சுனேத்ரா பவார் கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாராமதி தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் அரசியலில் நுழைந்தார். ஆனால், என்சிபி (சரத் பவார் அணி) சார்பில் போட்டியிட்ட தனது நெருங்கிய உறவினர் சுப்ரியா சுலேவிடம் தோல்வியடைந்தார். பிறகு, மாநிலங்களவை எம்.பி.யானார். கணவர் அஜித் பவார் மறைவை அடுத்து துணை முதல்வர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT