இந்தியா

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மகளை துன்புறுத்தியதாக மருமகன் கைது

ஷுபோமாய் சிக்தர்

மனைவியை சித்ரவதை செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மருமகன் கைது செய்யப்பட்டார்.

குற்றம்சாட்டப்பட்ட இம்ரான் மற்றும் ஷீலா தீட்சித் மகள் லத்திகா பிரிந்து வாழ்ந்து வந்தனர், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் லத்திகா புகாரின் அடிப்படையில் இம்ரான் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு முன்னதாக பெங்களூரு சென்று டெல்லி போலீஸார் இம்ரானைக் கைது செய்துள்ளனர்.

இம்ரானும் லத்திகாவும் 10 மாதங்களுக்கு முன்பாக பிரிந்தனர்.

SCROLL FOR NEXT