திருவனந்தபுரம்: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக கேரள காவல் துறை இயக்குநர் ராவடா ஏ.சந்திரசேகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 8 பேரை கைது செய்துள்ளோம். சுமார் 300 பேர் மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.