தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.1 கோடி வரை தொழில் கடன் வழங்க வகை செய்யும் ‘எழுக இந்தியா’ (ஸ்டாண்ட் அப் இந்தியா) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லி அருகேயுள்ள நொய்டா வில் புதிய திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: மறைந்த தலைவர் பாபு ஜெகஜீவன் ராம் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் ‘எழுக இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டுக்காக உழைத்த தலைவர் கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு மத்திய அரசு மரியாதை செலுத்தும். கடவுள் நம் எல்லோருக்கும் பாரபட்சமின்றி திறமைகளை அளித்துள்ளார். ஆனால் ஒரு தரப்பினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. தலித், பழங்குடியின மக்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. அவர்களுக்கு நல்ல தொடக் கத்தை, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக் கத்தில் ‘எழுக இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், பெண்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தொழில் கடன் பெறலாம். இவ் வாறு அவர் பேசினார்.