புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 27,409 என்றளவில் குறைந்துள்ளது. அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 2.2% என்றளவிலும், வாராந்திர பாசிடிவிட்டி ரேட் 3.63% என்றளவிலும் உள்ளது. (பாசிடிவிட்டி ரேட் அதாவது பரவல் விகிதம் என்பது 100ல் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் கணக்கீடு)
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன. அரசாங்கமும் நாட்டில் மூன்றாவது கரோனா அலை ஏற்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், தற்போது தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது அலையில் மும்பை நகரில் கரோனா தொற்று பாதித்தோரில் 95% பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸாலேயே பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
.கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,409 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 3.19% என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 3.99%. நோயில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.37% ஆக உள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,409 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,17,60,458.
* கடந்த 24 மணி நேரத்தில் 82,817 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,16,77,641.
* கடந்த 24 மணி நேரத்தில் 347 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,09,358.
* இதுவரை நாடு முழுவதும் 173.43 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி திட்டம் அமலில் உள்ள நிலையில், இந்த வயதுடையோரில் 5,24,34,558 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,64,08,841 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.