இந்தியா

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 3 கட்சிகள் சார்பில் பிரபல நடிகர்களுக்குள் கடும் போட்டி

பிடிஐ

கேரள சட்டப்பேரவை தேர்தலில் முக்கிய கட்சிகள் சார்பில் நடிகர் களுக்குள் போட்டி நிலவுகிறது.

கேரள சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடக்கிறது. கேரள வாக்காளர்களை பொறுத்த வரையில் அரசியலில் நடிகர், நடிகைகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கமாட்டார் கள். ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் இன்னசென்ட் வெற்றி பெற்றது, கேரள அரசியலில் புதிய மாற்றம் ஏற் பட்டுள்ளதை வெளிப்படுத்தியது.

இந்தச் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர்கள் முகேஷ், ஜகதீஷ் மற்றும் 2 இயக்குநர்கள் போட்டியிட உள்ளனர். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் கே.பி.கணேஷ் குமார். இவர் கேரள காங்கிரஸ் (பி) என்ற கட்சியை தொடங்கி உள்ளார். ஆளும் காங்கிரஸ் முன்னணியில் இருந்து தற்போது கணேஷ் குமார் விலகி உள்ளார். இவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்க உள்ளது. பத்தனம்புராவில் இவரை எதிர்த்து காமெடி நடிகர் ஜகதீஷை காங்கிரஸ் நிறுத்தி உள்ளது.

பாஜக சார்பில் நடிகர் பீமன் ரகு பத்தனம்புரா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதி யில் நடிகர்களுக்கு இடையில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

மேலும், மார்க்சிஸ்ட் சார்பில் கொல்லம் தொகுதியில் பிரபல நடிகர் முகேஷ் போட்டியிடுகிறார். காளிதாசா கலா கேந்திரா நாடக கம்பெனியை தொடங்கிய மூத்த தலைவர் ஓ.மாதவனின் மகன்தான் முகேஷ். இவரும் களத்தில் இறங்கி உள்ளார்.

பன்முகத் திறமை வாய்ந்த இவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறு கின்றனர். எனினும், கொல்லம் தொகுதி எம்எல்ஏ குருதாசனுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்காத தால், மார்க்சிஸ்ட் கட்சியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படு கிறது.

இயக்குநர்கள் ஏ.ராஜசேனன், அலி அக்பர் ஆகியோர் முறையே அருவிக்கரா, கொடுவலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின் றனர். தேசிய விருது பெற்ற நடிகர் சுரேஷ் கோபிக்கு சீட் வழங்க பாஜக விரும்பியது. ஆனால், இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அவர் கூறிவிட்டார். எனினும், பாஜக.வுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்வார் என்கின்றனர்.

SCROLL FOR NEXT