இந்தியா

நொய்டா சூப்பர்டெக் இரட்டைக் கோபுரம் விரைவில் தகர்ப்பு

செய்திப்பிரிவு

டெல்லியைத் தலைமை யிடமாகக் கொண்ட சூப்பர்டெக் நிறுவனம், நொய்டாவில் கட்டிய 40 தளங்கள் கொண்ட 2 மாடி கட்டிடங்கள் விதிகளை பின்பற்றி கட்டப்படவில்லை என்று வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சூப்பர்டெக் கின் இரட்டைக் கோபுரங்களைத் தகர்க்க கடந்த 2014-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதையடுத்து, கட்டிடத்தைத் தகர்க்கும் பொறுப்பு மும்பையை சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜி னீயரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்நிறுவனம் தகர்ப்புப் பணியை மேற்கொள்ள உள்ளது.

SCROLL FOR NEXT