புதுடெல்லி: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வருமான வரித் துறையும் இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதன் காரணமாக வரி செலுத்துவோர் சந்தித்துள்ள சிக்கலைக் கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.