வெளிநாடுகளில் இருந்து ஹைதராபாத் வந்த 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஹைதராபாத் விமான நிலையத்திற்கு கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்த 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது டிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, அந்தப் பயணி களில் ஒருவரான 35 வயது பெண்ணுக்கு கரோனா ‘நெகட்டிவ்’ என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர் குத்பலாபூர் கணேஷ் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார்.
அதன் பின்னர் அவருக்கும் ‘பாசிட்டிவ்’ இருப்பது உறுதி யானது. அதன்பின் அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டில் இருந்ததகவலை வைத்து, ஜி.டி மெட்டுபோலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீஸார் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்று, நடந்த விஷயங்களை எடுத்துக் கூறினர். இதைத் தொடர்;ந்து அவர் ஹைதராபாத்தில் உள்ள டிம்ஸ் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார்.