இந்தியா

இந்தியாவில் புதிதாக மேலும் 11,903 பேருக்கு கரோனா தொற்று: 311 பேர் பலி

ஏஎன்ஐ

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைவிட 14% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று, 10,423 பேருக்கு மட்டுமே தொற்று இருந்தது. அதே போல் கடந்த 24 மனி நேரத்தில் 14,159 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். 311 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 11,903.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,43,08,140.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 14,159 .

இதுவரை குணமடைந்தோர்: 3,36,97,740.

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.22% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 311.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,59,191.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,51,209. இது கடந்த 252 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.

வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 1.18%% ஆக உள்ளது. இத கடந்த 40 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 1.11% ஆக உள்ளது. இத கடந்த 30 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,07,29,66,315 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 41,16,230 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT