அசாமில் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 4-ம் தேதி 65 தொகுதி களுக்கும், 11-ம் தேதி 61 தொகுதி களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது.
முதல்வர் தருண் கோகோய் தனது சொந்தத் தொகுதியான டிடாபாரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2001 முதல் அவர் இந்த தொகுதியிலி ருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வரு கிறார். “மக்கள் என்மீது காட்டும் அன்புக்கு மிக்க நன்றி. தேர்தலில் வெற்றிபெறுவோம்” என கோகோய் தெரிவித்தார்.
கோகோய்க்கு எதிராக, மக்களவை எம்.பி. காமாக்யா பிரசாத் தாஸாவை பாஜக களமிறக்கியுள்ளது.