இந்தியா

ரூ.40 லட்சம் செம்மரங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் இருந்து வேலூருக்கு டிப்பர் லாரி மூலம் கடத்தப்படவிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து திருப்பதி வனத் துறை சரக அதிகாரி பாலவீரய்யா செய்தியாளர்களிடம் கூறியது: வனத்துறை ஊழியர்கள் திருப்பதி-சித்தூர் நெடுஞ்சாலையில் திங்கள் கிழமை நள்ளிரவு வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியில் இருந்து 2 பேர் தப்பி ஓடினர். பின்னர் அந்த லாரியை சோதனை யிட்டதில் அதில் 1,100 கிலோ செம் மரங்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 40 லட்சமாகும். லாரியும், செம்மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பாலவீரய்யா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT