ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷா சலம் வனப்பகுதியில் இருந்து தினமும் செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க போலீஸார் மற்றும் வனத்துறையினர் பல முயற்சிகளை மெற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை யில் கடப்பா மாவட்டம், ரயில்வே கோடூரு மண்டலம், பாலுபல்லி என்ற இடத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது கடப்பாவில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டி ருந்த கண்டெய்னர் லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது.
இதையடுத்து போலீஸார் ஜீப்பில் அந்த லாரியை துரத்திச் சென்றனர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு அதிலிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீஸார் அந்த லாரியை சோதனையிட்டதில், அதில் 200 செம்மரங்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதேபோல நேற்று காலையில் சேஷாசலம் வனப்பகுதி, திருப்பதி, திருச்சானூர் ஆகிய இடங்களில் அதிரடிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரங் களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேலூர் போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மொத்தம் 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.