இந்தியா

தொலைத்தொடர்பு துறையில் பெரும் மாற்றம்; டிஜிட்டல் கேஓய்சி- ஸ்பெக்ட்ரம் பகிர்வு இலவசம்: முக்கிய தகவல்கள் 

செய்திப்பிரிவு

தொலைத் தொடர்பு துறையில் 100 சதவீதம் வரை நேரடி வழியாக (automatic route) அந்நிய முதலீடு பெற மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். அவரது அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

1. தொலைத்தொடர்பு துறை தொடர்பான 9 கட்டமைப்பு மற்றும் 5 நடைமுறை சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

2. ஏஜிஆர் (சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய்) வரையறை பகுத்தாய்வு செய்யப்படும். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தொலைதொடர்பு அல்லாத வருவாய் சட்டரீதியான வரி செலுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

3. ஸ்பெக்ட்ரம் பகிர்வு இலவசமாக்கப்படுகிறது.

4. தொலைத்தொடர்பு துறையில் அனுமதி தேவையின்றி நேரடியாக 100% அந்நிய நேரடி முதலீடு.

5. அனைத்து KYC (உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்) படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்.

6. போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீபெய்ட் அல்லது நேர்மாறாக மாற தனி KYC தேவையில்லை.

7. ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு ஒரு ஏல நாட்காட்டி வைக்கப்பட வேண்டும். முன்னோக்கி, ஏலம் நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் நடைபெறும்.

8. 4G, 5G கோர் நெட்வொர்க் தொழில்நுட்பம் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட உள்ளது.

9. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம்

10. அரசின் வருவாயை பாதிக்காமல் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க பணப்புழக்கத்தை உறுதி செய்ய நடவடிக்கை

SCROLL FOR NEXT