கோப்புப்படம் 
இந்தியா

தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 70.75 கோடியாக உயர்வு; கரோனா சிகிச்சையில் இருப்போர் தொடர்ந்து குறைவு

பிடிஐ

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 70 கோடியைக் கடந்துள்ளது, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

'கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 37 ஆயிரத்து 875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 30 லட்சத்து 96ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 91ஆயிரத்து 256ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 608 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 1.18 சதவீதமாகக் குறைந்துள்ளது

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 22 லட்சத்து 64ஆயிரத்து 51 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.48ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 369 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 41 ஆயிரத்து 411 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 189 பேரும், மகாராஷ்டிராவில் 86 பேரும் உயிரிழந்தனர்.

நாட்டில் இதுவரை 53 கோடியே 49 லட்சத்து 43 ஆயிரத்து 93 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 லட்சத்து 53 ஆயிரத்து 745 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 70.75 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT