இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது நாளாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர், 308 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 42 ஆயிரத்து 766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 29 லட்சத்து 88 ஆயிரத்து 673 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கூடுதலாக 4 ஆயிரத்து 367 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 5-வது நாளாக சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் 1.24 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.
கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 91 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.42 ஆகக் குறைந்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 308 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 40 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 53 கோடியே 58 ஆயிரத்து 218 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 லட்சத்து 47 ஆயிரத்து 476 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 68.46 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது