கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் கூடும் கரோனா தொற்று: 24 மணி நேரத்தில் உயிரிழப்பு 500க்கு மேல் அதிகரிப்பு

பிடிஐ

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 47 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 500க்கு மேல் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 47 ஆயிரத்து 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கூடுதலாக 11 ஆயிரத்து 402 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் 1.19 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 20 லட்சத்து 28 ஆயிரத்து 825 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.48 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 509 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 39 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 183 பேரும், கேரளாவில் 173 பேரும் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 52 கோடியே 31 லட்சத்து 84 ஆயிரத்து 293 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 லட்சத்து 6 ஆயிரத்து 785 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 66.30 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 81 லட்சத்துக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT