இந்தியா

அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ உணவு தானியம் - புதிய மசோதா மீது கருத்து கேட்கிறது மத்திய அரசு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசின் அந்​தி​யோதயா அன்ன யோஜனா திட்​டத்​தில் உணவு தானிய ஒதுக்​கீட்டு முறையை மாற்​றியமைக்க அரசு பரிசீலித்து வரு​கிறது. இதன்​படி ஒரு​வருக்கு மாதம் 7 கிலோ, அதி​கபட்​சம் 35 கிலோ உணவு தானி​யம் வழங்​கப்​படும்.

உணவு மற்​றும் பொது விநி​யோகத் துறை, ‘தேசிய உணவுப் பாதுகாப்​புச் சட்​டம், 2013’-ல் திருத்​தம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது. இது தொடர்​பாக, ‘தேசிய உணவுப் பாது​காப்பு (திருத்த) மசோ​தா, 2026’ குறித்து ஜூலை 13ம் தேதி வரை பொது​மக்​கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்​திய உணவு அமைச்​சகம் கேட்டுக்கொண்டுள்​ளது.

தற்​போதைய சட்​டத்​தின்​படி, மிக​வும் ஏழ்​மை​யானவர்​களாகக் கருதப்​படும் அந்​தி​யோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) குடும்பங்களுக்​கு, குடும்​பத்​தின் அளவைப் பொருட்​படுத்​தாமல் மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானி​யம் வழங்​கப்​படு​கிறது. இதற்கு மாறாக, முன்​னுரிமைக் குடும்​பங்​கள் (பிஹெச்) பிரிவினருக்கு ஒரு​வருக்கு மாதம் 5 கிலோ வழங்​கப்​படு​கிறது. இந்த நடை​முறை​யால், முன்​னுரிமைக் குடும்ப உறுப்​பினர்​களை​விட, பெரிய அளவி​லான ஏஏஒய் குடும்​பங்​களுக்​குக் கிடைக்​கும் சராசரி தனி​நபர் ஒதுக்​கீடு குறை​வாகவே உள்​ளது.

இது குறித்து உணவு அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மிகவும் நலிந்த குடும்​பங்​களுக்​கான பாது​காப்பு நடவடிக்கையாக உரு​வாக்​கப்​பட்ட அந்​தி​யோதயா அன்ன யோஜனா திட்​டத்​தின் தற்​போதைய குடும்​பம் சார்ந்த ஒதுக்​கீட்டு முறை, குடும்​பத்​தின் அளவைப் பொறுத்து குறிப்​பிடத்​தக்க ஏற்றத்தாழ்​வு​களை ஏற்​படுத்​துகிறது.

புதிய மசோ​தா​வின்​படி, 2 உறுப்​பினர்​களைக் கொண்ட ஏஏஒய் குடும்​பத்​துக்கு மாதம் 14 கிலோ உணவு தானி​யம் கிடைக்​கும். அதே வேளை​யில், 5 அல்​லது அதற்கு மேற்​பட்ட உறுப்​பினர்​களைக் கொண்ட குடும்​பத்​துக்கு தற்​போதுள்ள அதி​கபட்ச வரம்​பான 35 கிலோ வழங்​கப்​படும்.

‘தேசிய உணவுப் பாது​காப்​புச் சட்​டம், 2013’ன் நோக்​கங்​களுக்கு இணங்க, மலிவு விலை​யில் தரமான மற்​றும் போது​மான அளவு உணவை உறுதி செய்​யும் மனித வாழ்க்​கைச் சுழற்சி அணுகு​முறை மூலம் உணவு மற்​றும் ஊட்​டச்​சத்து பாது​காப்பை வலுப்படுத்​தும் அரசின் பரந்த முயற்​சி​யின் ஒரு பகு​தி​யாகவே இந்தத் திருத்​தம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது” என கூறப்​பட்​டுள்​ளது.

அரிசி, கோதுமை இலவசம்: தற்​போது, முன்​னுரிமைக் குடும்பங்கள் மற்​றும் ஏஏஒய் குடும்​பங்​கள் ஆகிய இரு பிரிவினருக்​கும் அரிசி மற்​றும் கோதுமை இலவச​மாக வழங்கப்படு​கின்​றன என்பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT