இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 132 நாட்களுக்குப் பின் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
124 நாட்களுக்குப் பின் கரோனா தொற்று 40 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 29 ஆயிரத்து 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 100 ஆகச் சரிந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 13,089 பேர் சரிந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில், 1.27 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 6 லட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.39 ஆக அதிகரித்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 415 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 21 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 20 ஆயிரத்து 110 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 45 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 121 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 44.19 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.