இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 483 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 35 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 93 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் கடந்த 24 மணி நேரத்தில் 3,881 பேர் குறைந்துள்ளனர்.
கரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 3 கோடியே 4 லட்சத்து 68 ஆயிரத்து 79 பேர் வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.36 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 483 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 19 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 16 லட்சத்து 68 ஆயிரத்து 561 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 45 கோடியே 29 லட்சத்து 39 ஆயிரத்து 545 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 42.34 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.