இந்தியாவில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில்41 ஆயிரத்து 157 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 518 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறைஅமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 41 ஆயிரத்து 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 660 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 11 லட்சத்து 6 ஆயிரத்து 65 ஆக அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த பாதிப்பில், 1.36 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 3 கோடியே 2 லட்சத்து 69ஆயிரத்து 796 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.31ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கூடுதலாக 1,365 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 518 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 13 ஆயிரத்து 609 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 19 லட்சத்து 36 ஆயிரத்து 709 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 44 கோடியே 39 லட்சத்து 58 ஆயிரத்து 663 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 40.49 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது