இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து தினசரி பாதிப்பு கடந்த 58 நாட்களுக்கு பிறகு 1,20,529 குறைந்துள்ளது.
கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 58நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,20,529 ஆக உள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,86,94,879
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,20,529
இதுவரை குணமடைந்தோர்: 2,67,95,549
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,97,894
கரோனா உயிரிழப்புகள்: 3,44,082
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3,380
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 15,55,248
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 22,78,60,317
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.