மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோற்றுப் போனதால் இப்போது எம்எல்ஏ-வாக இல்லாமலேயே முதல்வராக நீடிக்கிறார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவரது பழைய தொகுதியான பவானிபூரில் வென்ற ஷோபன் தேவ் சட்டோபாத்யாய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் இங்கே இடைத் தேர்தல் நடத்தப்பட்டு இங்கிருந்து மம்தா எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், வங்கத்தில் எட்டு கட்டமாக நடந்த தேர்தல்களால் தான் கரோனா இரண்டாவது அலை அங்கே தீவிரமாக பரவிவிட்டது என்ற குற்றச்சாட்டு இருப்பதால் உடனடியாக இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகாது என்கிறார்கள். தீதிக்கு பாஜக திகில் கொடுக்க நினைத்தால், கரோனாவை காரணம் காட்டி அங்கே இடைத் தேர்தல் நடத்தும் நடவடிக்கைகளையும் கிடப்பில் போடலாம் என்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்