இந்தியாவில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 41,664 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 34,848 பேரும், தமிழகத்தில் 33,658 பேரும் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆறு நாட்களில் ஐந்தாவது முறை: புதிய பாதிப்புகளை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
கோவிட் தொற்றிலிருந்து நம் நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,07,95,335 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கோவிட்தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 84.25 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,62,437 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கடந்த ஆறு நாட்களில் ஐந்தாவது முறையாக அன்றாட புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதிதாக குணமடைந்தவர்களில் 70.94 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 36,18,458 ஆக இன்று சரிந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 14.66% ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 55,344 குறைந்துள்ளது.
தற்போதைய பாதிப்புகளில் 74.69%, 10 மாநிலங்களில் பதிவாகியுள்ளது.
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 18.22 கோடியைக் கடந்துள்ளது.
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த அறிக்கையின்படி 26,55,003 முகாம்களில் 18,22,20,164 தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் 17 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 3,11,170 புதிய பாதிப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளது. இதில் 74.7%, 10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கர்நாடகாவில் 41,664 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 34,848 பேரும், தமிழகத்தில் 33,658 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தேசிய உயிரிழப்பு வீதம், இந்தியாவில் தற்போது 1.09 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,077 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 75.55 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 960 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 349 பேரும் உயிரிழந்துள்ளனர்.