இந்தியா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை வெற்றி

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி எய்ம்ஸ்மருத்துவமனையில் மேற்கொள் ளப்பட்ட இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

75 வயதாகும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதயப் பிரச்னை காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த வெள்ளிக் கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவர் களின் கண்காணிப்பில் இருந்தகுடியரசுத் தலைவர் அடுத்த நாள்டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அங்கு அவருக்கு பரிசோதனைகள் நடைபெற்றன. பின்னர் அவரை இதயஅறுவை சிகிச்சை செய்துகொள்ளு மாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத் தினர். அதன்படி, நேற்று அவருக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இதுகுறித்து மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்ககத்தில் கூறியுள்ளதாவது:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அறுவைச் சிகிச்சைவெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டதற்காக மருத்துவக் குழுவினருக்கு எனது பாராட்டுகள். அவரது உடல்நலம் குறித்து எய்ம்ஸ் இயக்குநரிடம் பேசினேன். அவர்விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர்ரன்தீப் குலேரியா கூறும்போது, “குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்துக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் உள்ளார். தொடர்ந்து சில நாட்கள் அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருப்பார்” என்றார்.

SCROLL FOR NEXT