இந்தியா

மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - திலிப் கோஷ்

செய்திப்பிரிவு

மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். 2019 மக்களவைத் தேர்தலில் பாதி இடங்களைப் பிடிப்பது, 2021 பேரவைத் தேர்தலில் மாநில ஆட்சியைப் பிடிப்பது என்ற இலக்குடன் பணியாற்றி வருகிறோம். இதன்படி கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி கிடைத்தது. அடுத்து பேரவைத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT