இந்தியா

மக்கள் சொத்துக்களை தாரை வார்க்கிறது பாஜக: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பாஜக அரசு கொண்டு வந்துள்ள பட்ஜெட் மக்களை மறந்து விட்டு பொது சொத்துக்களை நெருங்கிய தொழிலதிபர் நண்பர்களுக்கு தாரைவார்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த பட்ஜெட் மிக அவசியமான நெருக்கடியான காலகட்டத்தில் மறுக்கப்பட வேண்டிய அம்சங்களோடு உருவாக்கப்படவில்லை. உதவி தேவைப்படுகிற மக்களின் கைகள் வெறுங்கைகளாக இருக்கையில் நாட்டின் சொத்துக்களை எல்லாம் தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்க பார்க்கிறது மத்திய அரசு என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “மிகநெருக்கடியான காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக வரவேண்டிய பட்ஜெட் மிகச்சதாரணமாக வகுக்கப்பட்டுள்ளது. தேர்தல்வரும் மாநிலங்களில் மட்டும் வாக்குகளுக்காக சில திட்டங்களை அறிவித்திருக்கிறது. துறைகள்சார்ந்து பல ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு செலவினம் குறித்தும்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதற்கான அறிகுறிதெரியவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT