இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 76 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் புதிதாக 38 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 82 லட்சத்து 67 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஆறுதல் தரும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 76 லட்சத்து 3 ஆயிரத்து 121 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 91.96 ஆக உயர்ந்துள்ளது
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 405 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6.55 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து 5-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 490 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 104 பேர் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 57 பேர், டெல்லியில் 42 பேர், சத்தீஸ்கரில் 58 பேர், தமிழகத்தில் 31 பேர், கர்நாடகாவில் 29 பேர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 11 கோடியே 17 லட்சத்து 89 ஆயிரத்து 350 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 46 ஆயிரத்து 247 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.