இந்தியாவில் கரோனாவிலிருந்து 91.15% பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தப் பாதிப்பு 80 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நோய்த்தொற்றால் 48 ஆயிரத்து 648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தப் பாதிப்பு 80 லட்சத்து 88 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 73 லட்சத்து 73 ஆயிரத்து 375 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 91.15 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 94 ஆயிரத்து 386 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.35 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 563 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 156 பேரும், சத்தீஸ்கரில் 55 பேரும், கர்நாடகாவில் 45 பேரும், மேற்கு வங்கத்தில் 61 பேரும், தமிழகத்தில் 35 பேரும், டெல்லியில் 27 பேரும், சத்தீஸ்கரில் 43 பேரும், கேரளாவில் 26 பேரும் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 10 கோடியே 77 லட்சத்து 28 ஆயிரத்து 88 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 64 ஆயிரத்து 648 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.