இந்தியா

புது டெல்லி: சாஸ்திரி பவனில் தீ விபத்து

செய்திப்பிரிவு

புது டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

மத்திய டெல்லியில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் இன்று காலை 9.45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 8 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடி வருகின்றன.

முதலில், தீ வளாகத்தின் ஏழாவது தளத்தில் பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

SCROLL FOR NEXT