இந்தியா

‘ஹலால்’ முறைக்கு தடை கோரிய மனு: உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அகண்ட பாரத மோர்ச்சா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

இறைச்சி உணவுக்காக இஸ்லாமியர்கள் ‘ஹலால்’ என்ற முறைப்படி கோழி, ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கொல்கிறார்கள். இது அந்த கால்நடைகளுக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் தரக்கூடிய முறையாகும். எனவே, இந்த முறையில் கால்நடைகள் கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த அவர் கூறியாவது:

இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன? மக்களின் உணவுப் பழக்கங்களில் நீதிமன்றங்களால் தலையிட முடியாது. யார் சைவ உணவுகளை உண்ண வேண்டும், யார் அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும் என நீதிமன்றங்கள் தீர்மானிக்க முடியாது.

‘ஹலால்’ முறையில் கொல்லப்பட்ட இறைச்சியை விரும்புபவர்கள் அதனை உண்ணட்டும். ‘தட்கா’ முறையில் கொல்லப்பட்ட இறைச்சி வேண்டுபவர்கள், அதனை உட்கொள்ளட்டும். இதில் நீதிமன்றங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.

SCROLL FOR NEXT