இந்தியா

மாநிலங்களவை தேர்தல்: 15 குஜராத் எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்

ஏஎன்ஐ

மாநிலங்களவைத் தேர்தல் வருவதையொட்டி காங்கிரஸ் கட்சி குஜராத்தில் தனது 15 எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் நோக்கத்துடன் ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவையிலிருந்து 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 உறுப்பினர்களை ஆனந்த் அருகேயுள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் பாரத் சிங் சோலங்கியிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறவுள்ளது. 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முன்னெச்சரிக்கையாக 15 காங். எம்.எல்.ஏ.க்களை ஏரியஸ் ரிவர்சைட் ரிசார்ட்டுக்கு மாற்றியுள்ளது காங்கிரஸ்.

முன்னதாக குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் சனிக்கிழமையன்று ராஜஸ்தான் அபு சாலையில் உள்ள வைல்டு விண்ட்ஸ் ரிசார்ட்டுக்கு அடைந்தனர்.

SCROLL FOR NEXT