ரமேஷ் பொக்கிரியால்- கோப்புப் படம் 
இந்தியா

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்  இயக்குனராக சந்திரசேகரன் நியமனம்

செய்திப்பிரிவு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக ஆர். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளா்.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘ஆர். சந்திரசேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பிற்கு இது ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கு (@CMOTamilNadu) எங்கள் நன்றி.’’ எனக் கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT