இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் 2,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 83 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்முறையாக பாஸிட்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 2 ஆயிரததைக் கடந்துள்ளது, உயிரிழப்பும் 80-க்குமேல் அதிகரித்துள்ளது
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கிவி்ட்டது. இதுவரை 39 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,301 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்து 633 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் தங்கி 28 ஆயிரத்து 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 682 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 26 ேபர் உயிரி்ழந்ததால் பலி எண்ணிக்கை 262 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நேற்று 6 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் நேற்று மூவர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆகவும், ராஜஸ்தானில் 3 பேர் உயிரிழந்ததால் 65 ஆகவும் அதிகரி்த்துள்ளது. தெலங்கானாவில் நேற்று 2 பேர் உயிரிழந்ததால் 28 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது, தமிழகத்தில் 29 பேர், கர்நாடகாவில் 25 பேர், ஆந்திராவில் ,மேற்கு வங்கத்தில் தலா 33 பேர், பஞ்சாப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், கேரளாவில் 4 பேரும், ஹரியாணா, பிஹாரில் தலா 4 பேரும், ஜார்க்கண்டில் 3 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 700 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,296 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து டெல்லியில் 4,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,256 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 5,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 2,770 பேரும், தமிழகத்தில் 2,757பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,341 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,846 பேரும், தெலங்கானாவில் 1,063 பேரும், கேரளாவில் 499 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர், 400 ேபர் குணமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் 2,487 பேர், ஆந்திராவில் 1,525 பேர், கர்நாடகாவில் 601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 666 பேர், மேற்கு வங்கத்தில் 922 பேர், பஞ்சாப்பில் 772 பேர், ஹரியாணாவில் 360 பேர், பிஹாரில் 481 பேர், அசாமில் 43 பேர், உத்தரகாண்ட்டில் 59 பேர், ஒடிசாவில் 157 பேர், சண்டிகரில் 88 பேர், சத்தீஸ்கரில் 43 பேர், லடாக்கில் 22 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் 115 பேர் , அந்தமான் நிகோபர் தீவில் 33 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், புதுச்சேரியில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 5 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மோகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப்பிரதேசத்தில் யாரும் பாதி்க்கப்படவில்லை, மிசோரத்தில், ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.