ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
காஷ்மீர் மாநிலம், அக்னூர் எல்லையில் பணியமர்த்தப்பட்டிருந்தவர் ராணுவ வீரர் எஸ்.என்.வசந்த். இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) பணியில் இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: "மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியைச் சேர்ந்தவர் வசந்த்.அவருக்கு இன்னும் திருமனம் ஆகவில்லை. பணியில் இருந்த போது வசந்த் தனது கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்" என்றார்.
மேலும், இச்சம்பவம் குறித்து நீதி விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும். போலீஸார் இது தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.