மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாயின.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தொடக்கத்தில் முன்னணி நிலவரமும் பிற்பகலில் இருந்து முடிவுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நிலவரம் மற்றும் முடிவுகளை தேர்தல் ஆணையம் eciresults.nic.in, eci.gov.in மற்றும் results.eci.gov.in. இணைய தளங்களில் வெளியிடுகிறது. தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்திலும் முன்னணி நிலவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலை போலவே இம்முறை மும்முனைப் போட்டி நிலவியது. ஆளும் ஆம் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி இருந்தது.
டெல்லியில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இங்கு ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்றாலும் அக்கட்சி கடந்த தேர்தலை விட இம்முறை குறைந்த தொகுதிகளையே கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.