நாடு முழுவதிலும் 5 லட்சம் காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2019-ம் ஆண்டு கணக்கீட்டின்படி பணிபுரியும் மொத்த காவலர்கள் எண்ணிக்கையில் 9 சதவீதத்துக்கும் குறைவாகவே பெண்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
நாடுமுழுவதும் காவல்துறைக்கு அனுமதிக்கப்பட்ட போலீஸார் எண்ணிக்கை 25,95,435 ஆகும். ஆயினும் 20,67,270 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 5,28,165 இடங்கள் காலியாக உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு (பிபிஆர்