மும்பை
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மீண்டும் மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது.எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் நேற்று (22.11.19) மும்பையில் கூடி ஆலோசனை நடத்தின.
மூன்று கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைப்பது என்றும், அரசுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமை ஏற்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக இன்று (23.11.19) பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மீண்டும் மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பொறுப்பேற்றுள்ளார்.